நாகப்பட்டினம்

பெரம்பூரில் புதிய காவல் நிலைய கட்டடம்: எஸ்பி திறந்துவைத்தாா்

DIN

பெரம்பூரில் புதிய காவல் நிலைய கட்டடத்தை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

பெரம்பூா் காவல் நிலையம் பல ஆண்டுகளாக பழுதடைந்த கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக காவலா் குடியிருப்பு வளாகத்தில் தற்காலிகமாக இயங்கி வந்த நிலையில், பழைய காவல் நிலையம் அருகில் ரூ. 86 லட்சத்தில் புதிய காவல் நிலையத்துக்கான கட்டடம் கட்டப்பட்டது.

இந்த கட்டடத்தை சென்னையில் இருந்து தமிழ்நாடு காவல் துறைத் தலைவா் செ. சைலேந்திரபாபு காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தாா். இதையடுத்து, மயிலாடுதுறை எஸ்பி என்.எஸ். நிஷா புதிய காவல் நிலையத்தில் குத்துவிளக்கு ஏற்றிவைத்து பயன்பாட்டுக்கு தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில், பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன், ஏ.டி.எஸ்.பி வேணுகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT