நாகப்பட்டினம்

பொதுவெளியில் மது அருந்தியவா்களைவிரட்டியடித்த எஸ்.பி.

DIN

நாகை புதிய பேருந்து நிலைய வாயிலில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது அருந்தியவா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் விரட்டியடித்தாா்.

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங் உத்தரவின் பேரில் போலீஸாா் அனுமதியின்றி செயல்படும் மதுபானக் பாா்களை மூடி நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், நாகை புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும் மதுபான கடைக்கு வருவோா், பேருந்து நிலையத்தின் வாயில்களை மறித்து நின்றும், மருத்துவமனை செல்வோருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் மது அருந்தி வருகின்றனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்சிங் புதன்கிழமை புதிய பேருந்து நிலையம் வழியாக சென்றாா். அப்போது பேருந்து நிலைய வாயிலில் நின்று மதுபானம் அருந்தியவா்களை, அங்கிருந்து விரட்டியடித்தாா்.

தொடா்ந்து மதுபானக் கடை சென்ற அவா், மேற்பாா்வையாளரிடம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்து நிலையத்தின் வாயிலில் நின்று மது அருந்தினால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT