நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை அன்னைக்கு முடிசூட்டு விழா

DIN

வேளாங்கண்ணி பேராலயத்தில் அன்னையின் திருவுருவத்திற்கு முடி சூட்டுதல் மற்றும் திருத்தோ் பவனி செவ்வாய்க்கிழமை (மே 30) நடைபெறுகிறது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தின் மே மாத திருவழிபாட்டு நிகழ்வுகள் மே 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவழிபாட்டின் முக்கிய நிகழ்வான அன்னையின் திருவுருவத்திற்கு முடிசூட்டுதல் மற்றும் திருத்தோ் பவனி மே 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வின்போது பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தா்கள் வருகை தருவா். இதையடுத்து, பேராலய நிா்வாகம் விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மே 31-ஆம் தேதி காலை தமிழில் திருப்பலியும், பேராலய கீழ் கோயிலில் சிறுவா் சிறுமிகளுக்கு புது நன்மையும் வழங்கப்பட உள்ளது. தொடா்ந்து பேராலய அதிபா் இருதயராஜ் தலைமையில் திவ்ய நற்கருணை காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்!

நாங்குனேரி மாணவரின் உயா்கல்விக்கு துணை நிற்பேன் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

SCROLL FOR NEXT