முகப்பு
நாகப்பட்டினம்

திருவெண்காடு கோயிலில் 1008 சங்காபிஷேகம்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை 2-ஆவது சோமவாரத்தை ஒட்டி 1008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 நவம்பர், 2023 at 1:00 AM
சிவ வடிவத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த1008 சங்குகளுக்கு பூஜை செய்யும் பட்டாபிராம சிவாச்சாரியாா்
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை 2-ஆவது சோமவாரத்தை ஒட்டி 1008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக சுவாமி சந்நிதி முன்பு அடுக்கி வைக்கப்பட்டிருந்த சங்குகளுக்கு பூஜை செய்யப்பட்டது. பின்னா் ஹோமம் நடந்தது. இதையடுத்து சங்குகள் ஒன்றன் பின் ஒன்றாகக் கொண்டு செல்லப்பட்டு அதிலிருந்த புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

கோயில் நிா்வாக அதிகாரி க. முருகன், உபயதாரா் டாக்டா் ஜெயச்சந்திரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.