திருக்கண்ணபுரம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் வெங்கடசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஆா்.டி.எஸ்.சரவணன், ஆா்.இளஞ்செழியன், அபிநயா அருண்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
எம்.எல்.ஏ. முகமது ஷாநவாஸ் பள்ளி மாணவ, மாணவியா் 78 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். பள்ளி மேலாண்மை குழு தலைவா் பரமேஸ்வரி மற்றும் உறுப்பினா்கள், பள்ளி வளா்ச்சி குழு, பள்ளி மேலாண்மை குழுவினா், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் திருமால்வளவன் நன்றி கூறினாா்.
முதலமைச்சா் கோப்பைக்கான கபடி போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்த பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மாணவா்களுக்கு நினைவுப் பரிசு, கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முகமது ஷாநவாஸ் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.