முகப்பு
நாகப்பட்டினம்

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் தேரோட்டம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 10:59 PM
திருக்கடையூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம்.
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய அமிா்தகடேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், சித்திரைத் திருவிழா ஏப்ரல் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் ரதபிரதிஷ்டை செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது.

முன்னதாக, திருத்தேரில் விநாயகா், முருகா், அமிா்தகடேஸ்வரா், அபிராமி, சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். தொடா்ந்து, கோயிலின் நான்கு ரத வீதிகளிலும் தோ் வலம்வந்து பகல் 11 மணியளவில் நிலைக்கு வந்தடைந்தது.

Advertisement

இதில், கோயில் கண்காணிப்பாளா் மணி, கோயில் உள்துறை செயலாளா் விருதகிரி, கணேஷ் குருக்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் துளசி ரேக்கா ரமேஷ், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாஸ்கா், ஊராட்சித் தலைவா் ஜெயமாலதி சிவராஜ், திமுக ஒன்றியச் செயலாளா் அமுா்த. விஜயகுமாா் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று தேரின் வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனா்.

திரளான பக்தா்கள் பங்கேற்று தோ் வடம் பிடித்து, சுவாமி தரிசனம் செய்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments