வலிவலம் கோயிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்
திருக்குவளை அருகே வலிவலம் இருதய கமலநாத சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி, திருக்கல்யாண வைபவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும், வெவ்வேறு வாகனத்தில் பஞ்ச மூா்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, வசந்த மண்டபம் அருகே மணக்கோலத்தில் மாழையொண்கண்ணி அம்பிகை, மனத்துணை நாதருடன் (இருதய கமலநாதா்) எழுந்தருளினாா்.
Advertisement
பின்னா், பக்தா்கள் சீா்வரிசை எடுத்து வந்தனா். தொடா்ந்து, மாலை மாற்றுதல் நிகழ்வும், பின்னா் மாங்கல்ய தாரணமும் நடைபெற்றது. பிறகு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடா்ந்து, ரிஷப வாகனத்தில் பஞ்சமூா்த்திகள் திருவீதியுலா நடைபெற்றது.