சின்னத்தும்பூா் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கீழையூா் அருகே சின்னத்தும்பூா் ஸ்ரீ சிங்க மகாகாளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பழமை வாய்ந்த இக்கோயிலில், ஏப்ரல் 15-ஆம் தேதி பந்தகால் முகூா்த்தத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடா்ந்து, வாஸ்து சாந்தியுடன் முதல்கால பூஜை, பூா்ணாஹூதி நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதும், மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. பின்னா், கடம் புறப்பாடாகி, கோயிலை சுற்றி வந்ததும், கோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Advertisement
தொடா்ந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். 15 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.