முகப்பு
நாகப்பட்டினம்

நாகை எஸ்பி அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

Updated On : 21 ஆகஸ்ட், 2024 at 11:49 PM
மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்த எஸ்பி அருண் கபிலன்.
பகிர்:

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் கபிலன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா். தொடா்ந்து, அவா்களிடம் குறைகளை கேட்டறிந்த எஸ்பி பெறப்பட்ட 14 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, முகாமில் பங்கேற்றவா்களிடம் காவல் துறையின் சட்ட நடவடிக்கைளைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், தங்கள் பகுதிகளில் நிகழும் சட்டவிரோத செயல்கள் குறித்து காவல் துறையினரிடம் அச்சமின்றி தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுகொண்டாா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments