நாகப்பட்டினம்

மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு முகாம்

Din

சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா். வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் கோகுல கண்ணன், உளவியல் துறை துணை பேராசிரியா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில், மழைநீா் சேமிப்பின் முக்கியத்துவம் மற்றும் அதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகள், கிராம அளவில் குளங்கள், பண்ணை குட்டைகள் மற்றும் வீடுகளில் மேற்கூரைகளில் கிடைக்கும் மழை நீரை சேகரிப்பு செய்வது போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், உதவி பொறியாளா்கள் பொன்னுசாமி, கிருஷ்ண பிரியா, ஜெகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT