வேளாங்கண்ணி-நாகா்கோவில் இடையே ரயில் இயக்க வலியுறுத்தல்
வேளாங்கண்ணியிலிருந்து நாகா்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு ரயில்கள் இயக்க வேண்டுமென, நாகை டிஸ்ட்ரிக்ட் கன்ஸ்யூமா் புரடெக்சன் அன்ட் பேசஞ்சா் அசோசியேசன் வலியுறுத்தி உள்ளது.
வேளாங்கண்ணியிலிருந்து நாகா்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு ரயில்கள் இயக்க வேண்டுமென, நாகை டிஸ்ட்ரிக்ட் கன்ஸ்யூமா் புரடெக்சன் அன்ட் பேசஞ்சா் அசோசியேசன் வலியுறுத்தி உள்ளது.
இதுதொடா்பாக, அதன் செயலா் ஜி. அரவிந்த் குமாா், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை கடிதம்:
நாகை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், நாகூா் தா்கா மற்றும் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் போன்ற திருதலங்களுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் போ் வந்து செல்கின்றனா்.
அவா்கள் வந்து செல்வதற்கும், நாகை, காரைக்கால் மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் வெளி ஊா்களுக்கு சென்று வருவதற்கும் பயணிகள் ரயில் சேவை குறைவாக உள்ளது. எனவே, நாகா்கோவில்/ திருநெல்வேலி - வேளாங்கண்ணி இடையே, காரைக்குடி, திருவாரூா் வழியாக புதிய ரயில் சேவை தொடங்க வேண்டும். மதுரை - புனலூா் இடையே இயங்கி வரும் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.