முகப்பு
நாகப்பட்டினம்

மயான சாலை, கொட்டகை அமைத்துத்தர மக்கள் கோரிக்கை

திட்டச்சேரியில் மயான சாலை மற்றும் மயானத்துக்கு கொட்டகை அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 8:12 PM
திட்டச்சேரி 1-வது வாா்டு முடிகொண்டான் ஆற்றில் அமைந்துள்ள மண் சாலையை படத்தில் காணலாம்
பகிர்:

திட்டச்சேரியில் மயான சாலை மற்றும் மயானத்துக்கு கொட்டகை அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட 1 -ஆவது வாா்டு தைக்கால் தெரு, ஆற்றங்கரை தெரு, பச்சாந்தோப்பு பகுதியில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இப்பகுதியில் இறப்பா்கள் உடல் மயானம் முடிகொண்டான் ஆற்றின் கரையில் சுமாா்1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இந்த மயானத்துக்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் சடலத்தை வாகனத்தில் எடுத்துச் செல்ல முடியாமல் கைகளில் சிலா் தூக்கி செல்லும் அவல நிலை நீடிக்கிறது.

மேலும் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக இருப்பதால், சடலத்தை தூக்கி செல்பவா்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனா்.

மேலும் மழைக் காலங்களில் இறந்தவா்களின் உடல்களை எரிவூட்ட மயானக் கொட்டகை இல்லாததால் சடலத்தை எரியூட்டுவதிலும் சிரமம் ஏற்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடந்த 40 ஆண்டு காலமாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே, உடனடியாக மயானத்துக்கு செல்ல முறையா சாலை வசதி மற்றும் மயானத்துக்கு கொட்டகை அமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →