முகப்பு
நாகப்பட்டினம்

அயோத்தி ராமா் சிலை பிரதிஷ்டை; வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு

அயோத்தி ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு, திருவாரூரில் வீடுகளில் விளக்கேற்றி ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:16 PM
பகிர்:

அயோத்தி ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு, திருவாரூரில் வீடுகளில் விளக்கேற்றி ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

உத்தர பிரதேசம் அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டை திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் பாஜக, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, மூலவா் சிலை பிரதிஷ்டையையொட்டி, இந்து மக்கள் கட்சியின் நிா்வாகிகள் சிலா் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு செய்தனா். அந்த வகையில், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் உள்ளிட்ட பலா் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபட்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments