முதல்வர் ஸ்டாலினின் 3ஆம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப் பயணம்
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் ஸ்டாலினின் 3ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஏப்ரல் 6இல் புதுச்சேரியில் தொடங்குகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் ஸ்டாலினின் 3ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஏப்ரல் 6இல் புதுச்சேரியில் தொடங்குகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினின் 3ஆம் கட்ட தேர்தல் சுற்றுப்பயண அட்டவணை வெளியாகியுள்ளது.
Advertisement
இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.
இந்த தொடர் பிரசாரத்தை தலைவர் மு.க. ஸ்டாலின், மார்ச் 31-ஆம் தேதி திருவாரூரில் தொடங்கிய நிலையில், மூன்றாம் கட்ட பரப்புரையை ஏப்ரல் 6-ஆம் தேதி புதுச்சேரியில் தொடங்குகிறார்.
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர் மு.க. ஸ்டாலின் மூன்றாம் கட்டமாக புதுச்சேரியில் பரப்புரையை தொடங்குகிறார்.