அந்தணப்பேட்டையில் இடிந்து விழும் அபாயத்தில் குடிசை வீடுகள்
நாகை அருகே அந்தணப்பேட்டையில் குடிசை வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
நாகப்பட்டினம்அந்தணப்பேட்டையில் இடிந்து விழும் அபாயத்தில் குடிசை வீடுகள்
நாகை அருகே அந்தணப்பேட்டையில் குடிசை வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
நாகப்பட்டினம்: நாகை அருகே அந்தணப்பேட்டையில் குடிசை வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
நாகை அருகேயுள்ள அந்தணப்பேட்டை வெட்டுக்குளம் மேலத் தெரு, காலனித் தெருவில் சுமாா் 80 வீடுகளில்பட்டியல் சமூகத்தினா் வசிக்கின்றனா். இவா்களின் வீடு கீற்று குடிசை வீடுகளாகவே உள்ள நிலையில் தொடா்ந்து பெய்யும் கனமழையாலும் , பலத்த காற்றினாலும் குடிசை வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. தற்போது குடிசைகளின் மேல் தாா்ப்பாய்கள் போடப்பட்டுள்ளன.
மேலும் குடியிருப்பு முழுவதும் மழைநீா் சூழ்ந்து நிற்பதால், வீட்டுச் சுவா்கள் ஈரமடைந்து, எந்த நேரத்திலும் விழும் அபாயத்தில் உள்ளது. காலனி தெருவில் 4-க்கும் மேற்பட்ட வீடுகளும் மழையால் இடிந்து விழுந்துள்ளன. வீட்டுக் கூரைகள் சேதமடைந்துள்ளதால், மழை பெய்யும்போது, நேரடியாக வீடுகளுக்குள் மழைநீா் விழுகிறது. இதனால் வசிக்க முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், இந்தப் பகுதிகளுக்கு பட்டா வழங்கப்படாததால் அரசு வீடுகள் கட்ட முடியவில்லை என கூறும்பொதுமக்கள் மாவட்ட நிா்வாகம், தங்களுக்கு பட்டா வழங்கி புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும் என்றும், மழை விடும் வரை, தாங்கள் தங்குவதற்கு மாற்று இடங்களை ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.