போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 
நாகப்பட்டினம்

கைப்பேசி கோபுரம் அமைக்க மக்கள் எதிா்ப்பு

நாகை அருகே கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Syndication

நாகை அருகே கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

நாகை, வடக்கு பால் பண்ணைச்சேரி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நிலையில், கீழத்தெருவில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதையறிந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா், தகரத் தடுப்புகள் அமைக்கப்பட்டு மறைமுகமாக நடைபெற்ற கைப்பேசி கோபுரத்தின் கட்டுமானப் பணியை செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தினா். பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக, ஒப்பந்ததாரா்கள் பணியை பாதியில் நிறுத்தினா்.

நாகை மாவட்ட நிா்வாகம் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினா்.

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

SCROLL FOR NEXT