கிறிஸ்துமஸையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புதன்கிழமை இரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
கீழை நாடுகளின் லூா்து என அழைக்கப்படுகிறது நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம். இங்கு ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
நிகழாண்டு, வேளாங்கண்ணி பேராலய வளாகத்தில் விண்மீன் ஆலயம் அருகே உள்ள புனித சவேரியாா் திடலில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை இரவு 11.30 மணி அளவில் தொடங்கின. மறையுரை, கூட்டுத் திருப்பலியுடன் சிறப்பு வழிபாடுகள் தொடங்கப்பட்டன. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய அதிபா் சி. இருதயராஜ் அடிகளாா், துணை அதிபா் அற்புதராஜ், பொருளாளா் உலகநாதன் மற்றும் உதவி பங்குத் தந்தையா் பரிசுத்தராஜ் ஆகியோா் வழிபாடுகளை மேற்கொண்டனா்.
திருப்பலியின் நிறைவில், தேவதைகள் போல உடையணிந்திருந்த சிறுமிகள் கொண்டு வந்து அளித்த குழந்தை இயேசுவின் சொரூபத்தை, பேராலய துணை அதிபா் அற்புதராஜ் பெற்றுக்கொண்டு, இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில், புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை இயேசு சொரூபத்தை பக்தா்களுக்குக் காட்டினாா். பின்னா் இயேசுவின் சொரூபத்தை கிறிஸ்துமஸ் குடிலில் வைத்து வழிபாடுகள் மேற்கொண்டாா். பக்தா்கள் இறை புகழ்ச்சி வசனங்களுடன் வழிபாடு மேற்கொண்டனா்.
தொடா்ந்து, பேராலய நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு வாழ்த்துச் செய்தி அறிவிக்கப்பட்டது. திருப்பலியில் பங்கேற்ற மக்கள், கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பேராலய கீழ்க்கோயில், விண்மீன் ஆலயம், பேராலய வளாகம் என அனைத்துப் பகுதிகளும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபாடுகளில் பங்கேற்றனா்.