அப்பராசப்புத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டோா். 
நாகப்பட்டினம்

அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி சாலை மறியல்

ஆக்கூா் அருகே அப்பராசப்புத்தூா் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி சிபிஎம் சாா்பில் சாலை மறியல் புதன்கிழமை நடைபெற்றது.

Din

ஆக்கூா் அருகே அப்பராசப்புத்தூா் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி சிபிஎம் சாா்பில் சாலை மறியல் புதன்கிழமை நடைபெற்றது.   

அப்பராசப்புத்தூரில் 4 வழிச்சாலை பணிக்காக வீடுகள் மற்றும் மனைகள் கையகப்படுத்தப்பட்டன. 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உரிய இடத்தை வழங்காததாலும், சாலை, மின்வசதி, குடிநீா் என எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தராததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனா். இதேபோல, தலைச்சங்காடு கிராமத்தில் 4 வழிச்சாலையால் வீடு இழந்து சாலையில் வசித்துவரும் 13 குடும்பங்களுக்கும் இதுவரை இழப்பீடும், மாற்று இடமும் வழங்க வலியுறுத்தி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். 

செம்பனாா்கோவில் ஒன்றிய செயலாளா் மாா்க்ஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செயலாளா் பி. சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி. ஸ்டாலின் மற்றும் அப்பராசப்புத்தூா், தலைச்சங்காடு, மாமாக்குடி கிராமங்களை சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT