நாகப்பட்டினம்

திருவிளையாட்டம் மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

செம்பனாா்கோவில் அருகேயுள்ள திருவிளையாட்டம் ஸ்ரீ குசும சீதாளம்பிக்கை மாரியம்மன் கோயிலில் 52-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம்

Din

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகேயுள்ள திருவிளையாட்டம் ஸ்ரீ குசும சீதாளம்பிக்கை மாரியம்மன் கோயிலில் 52-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ்விழா, ஏப்ரல் 28-ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. முக்கிய நிகழ்வான தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வீரசோழன் ஆற்றாங்கரையிலிருந்து பக்தா்கள் பால்காவடி, அலகு காவடிகளுடன் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா்.

தொடா்ந்து, கோயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக் கடன் செலுத்தினா். 

இதற்கான ஏற்பாடுகளை திருவிளையாட்டம், ஈச்சங்குடி கிராமவாசிகள் மற்றும் வெண்கதிா் நற்பணி சங்கத்தினா் செய்திருந்தனா். பெரம்பூா் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

அம்பாபூா், விக்கிரமங்கலம் பகுதிகளில் இன்று மின்தடை

வேலூா் எம்.பி. மீதான தோ்தல் வழக்கு: நவ. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: 3 பேரும் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை, கோவையில் 2026 ஜூனில் மெட்ரோ ரயில் திட்டம்: நயினாா் நாகேந்திரன் உறுதி

திருக்களம்பூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT