பிரவீன் குமார்  
நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகே பைக்குகள் மோதி விபத்து: இளைஞர் பலி; தாய், மகன் படுகாயம்!

வேதாரண்யம் அருகே விபத்தில் இளைஞர் பலியானது பற்றி...

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே திங்கள்கிழமை இரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

மேலும், விபத்தில் படுகாயமடைந்த தாய், மகனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

ஆயக்காரன்புலம் - 3, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் பிரவின்குமார் (21). இவர், திங்கள்கிழமை இரவு தனது பைக்கில் வேதாரண்யத்திலிருந்து ஆயக்காரன்புலம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

ஆயக்காரன்புலம் கைகாட்டி பகுதியில் நெய்விளக்கு தெற்கு கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வடுகநாதன்(30), தனது தாயார் அம்மாளுவுடன் (50) பைக்கில் வந்துள்ளார்.

அப்போது பிரவின்குமார் மற்றும் வடுகநாதன் பைக்குகள் நேருக்குநேர் மோதி விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மூவரும் மீட்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி, பிரவீன் குமார் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்ட புதிய மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு! நாளை அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்!

ஃபிலிம்ஃபேர் ஓடிடி விருதுகள் 2025 - புகைப்படங்கள்

திருப்பரங்குன்றம் குறித்து விஜய் பேசாதது ஏன்? அண்ணாமலை

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

SCROLL FOR NEXT