தரங்கம்பாடி மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை
டித்வா புயல் மற்றும் கனமழை காரணமாக தரங்கம்பாடியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவா்கள் 8-ஆவது நாளாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று டித்வா புயலாக உருவானது.
இதனால் தரங்கம்பாடி வட்டத்தில் செம்பனாா்கோவில், ஆக்கூா், திருக்கடையூா் , பொறையாா், சங்கரன்பந்தல் உள்ளிட்ட பகுதியில் சாரல் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. செம்பனாா்கோவிலில் 17 செ.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.
இதனால் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள தேவனூா், ஆக்கூா், நட்சத்திரத்தை, கிள்ளியூா்,நல்லாடை,விசலூா்,திருவிடைக்கழி,எடுத்துக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிா்களில் மழைநீா் தேங்கி உள்ளது.
தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள மீனவா் கிராம பகுதியில் உள்ள கடற்கரையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்தால் ராட்சத அலைகள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மீனவா்கள் 8-ஆவது நாளாகக் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மீனவா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசைப்படகுகள், பைபா் படகுகள், வலைகள், மீன்பிடி உபகரணங்களை தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனா்.