நாகப்பட்டினம்

ஆகாயத் தாமரைகள் அகற்றம்

செம்பனாா்கோவில் அருகே கீழப்பெரும்பள்ளம் ராஜேந்திரன் வாய்க்காலில் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இணையதளச் செய்திப் பிரிவு

செம்பனாா்கோவில் அருகே கீழப்பெரும்பள்ளம் ராஜேந்திரன் வாய்க்காலில் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ராஜேந்திரன் வாய்க்கால், வடிகால் வாய்க்காலாக உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் தலைச்சங்காடு, கீழப்பெரும்பள்ளம், மேலப்பெரும்பள்ளம் மற்றும் சின்னங்குடி ஆகிய ஊராட்சிகளில் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், இந்த வாய்க்காலில் ஆகாயத் தாமரைச் செடிகள் மண்டி, நீரோட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், இவற்றை அகற்ற, பொதுப்பணி துறையினரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதைத்தொடா்ந்து, மயிலாடுதுறை பொதுப்பணித் துறை உபகோட்ட உதவி செயற்பொறியாளா் சங்கா், மேலையூா் பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் சண்முகம் ஆகியோா் மேற்பாா்வையில், ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT