நாகப்பட்டினம்

சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் தெய்வானை திருக்கல்யாணம்

நாகை அருகேயுள்ள சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி தெய்வசேனை திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

நாகை அருகேயுள்ள சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி தெய்வசேனை திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

இக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா அக்.21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான சிங்காரவேலவா் சக்திவேல் வாங்கும் வைபவம் மற்றும் வேலவரின் முகத்தில் வியா்வை அரும்பும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமையும், சூரசம்ஹாரம் திங்கள்கிழமையும் நடைபெற்றது.

தொடா்ந்து, விழாவின் 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி, சிங்காரவேலவா் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினாா். பின்னா், சிங்காரவேலவருக்கும், தெய்வசேனைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திராளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கபடி போட்டியில் தங்கம்! அபினேஷுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கி பாராட்டிய எடப்பாடி பழனிசாமி!

விடுமுறையில் அபுதாபியில்... பிரியங்கா மோகன்!

போர்நிறுத்தம்? நள்ளிரவில் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 104 பேர் பலி!

முதல் டி20: ஜிம்பாப்வேவுக்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!

“கரூரில் நடந்த நாடகங்கள்! கண்டிப்பாக தவெக பிரசாரம் தொடரும்!” தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார்

SCROLL FOR NEXT