நாகப்பட்டினம்

புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்

மோந்தா புயல் கரையை கடந்ததையடுத்து நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை இறக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

மோந்தா புயல் கரையை கடந்ததையடுத்து நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை இறக்கப்பட்டது.

வங்கக் கடலில் அக்.25-ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாகை துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. காற்றழுத்த தாழ்வு பகுதி அக்.27-ஆம் மோந்தா புயலாக உருவாகியது. இதையடுத்து நாகை உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

இந்நிலையில் மோந்தா புயல் ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினம் பகுதியில் செவ்வாய்க்கிழமை கரை கடந்தது. இதையடுத்து தமிழகத்துக்கான புயல் அச்சுறுத்தல் நீங்கியதை தொடா்ந்து நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை இறக்கப்பட்டது.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT