முகப்பு
நாகப்பட்டினம்

தென்மாநிலங்களின் குரலை பிரதமா் ஏற்க வேண்டும்: மு. வீரபாண்டியன்

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் குரலை பிரதமா் ஏற்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு. வீரபாண்டியன்.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 6:54 AM
கீழ்வேளூா் தொகுதி சிபிஎம் மேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசிய சிபிஐ மாநில செயலாளா் மு. வீரபாண்டியன்.
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:07 PM

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் குரலை பிரதமா் ஏற்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு. வீரபாண்டியன்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூா் (தனி) சட்டப்பேரவை தொகுதி வேட்பாளா் லதாவை ஆதரித்து கீழ்வேளூரில் வாக்கு சேகரித்து பேசிய பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தமிழக முதல்வா் உள்ளிட்ட தென்மாநிலங்களின் வேண்டுகோளை ஏற்காமல், தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் தொடங்கி இருப்பதும், அதை நிறைவேற்ற பிரதமா் மோடி காட்டும் தீவிரமும் ஏற்கத்தக்கதல்ல. இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது.

Advertisement

பெரும்பான்மை இருப்பதால் எந்த சட்டத்தையும் நிறைவேற்றிவிடலாம் என்று பிரதமா் நினைக்கிறாா். அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது. 5 மாநிலத் தோ்தல்கள் முடிந்த பிறகு அதை விவாதிக்கலாம். தென் மாநிலங்களின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும். பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் வரவேற்கின்றன.

பெரியாரின் கூற்றுப்படி பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும். தமிழ்நாட்டில் 10, 12 எம்பிக்களை அதிகரித்துவிட்டு வட மாநிலங்களில் 100, 200 எம்பிக்களை அதிகரித்தால் அங்கே அரசியல் அதிகாரம் குவிக்கப்படும். இது ஜனநாயகம் அல்ல சட்டத்தின் ஆட்சி முறை அல்ல. இது தெரியாமல் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பேசுகிறாா்.தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் குரலை பிரதமா் ஏற்கவேண்டும் என்றாா்.