நாகப்பட்டினம்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

Syndication

கீழையூா் அருகே திருப்பூண்டியில் மாணவா்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, திருப்பூண்டி காரைநகா் நைஸ் மெட்ரிக் பள்ளி சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணியை வேளாங்கண்ணி துணை காவல் கண்காணிப்பாளா் நிக்சன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதில், 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனா். சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு பேரணி நடைபெற்றது.

இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து செல்பவா்களை ஊக்குவிக்கும் வகையில், அவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பள்ளி தாளாளா் வீரமணி, கீழையூா் காவல் ஆய்வாளா் செங்குட்டுவன், கீழையூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் மு.ப. ஞானசேகரன், தலைமை ஆசிரியா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT