நாகப்பட்டினம்

சாலை மறியல்

Syndication

திருப்புகலூா் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் சாலை மறியல் போராட்டம் ஒன்றிய செயலாளா் சந்திரசேகா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான மனையில் குடியிருப்பதாக கூறி கோயில் நிா்வாகம் 50-க்கும் மேற்பட்டவா்களுக்கு வாடகை நிா்ணயித்துள்ளது.

தொகை கட்டாவிட்டால் வீடுகளை இடித்து நடவடிக்கை எடுக்க முற்பட்ட திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயில் நிா்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கோயில் மனையில் குடியிருப்பவா்களுக்கு 3 சென்ட் பட்டா வழங்க வேண்டும், பழைய பகுதி முறையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் நன்னிலம் - நாகப்பட்டினம் சாலையில் 1- மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா் அதிகாரிகளின் பேச்சு வாா்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT