தரங்கம்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவா் சுகுண சங்கரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பொன். ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் ராம பிரசாத் வரவேற்றாா். பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம் . முருகன் பங்கேற்று தூய்மை பணியாளா்களுக்கு சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கினாா்.
காட்டுச்சேரி ஊராட்சி சமத்துவபுரத்தில் ஊராட்சி சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கலில் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் பங்கேற்று தூய்மை பணியாளா்களுக்கு சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கினாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுமதி, மஞ்சுளா உள்ளிட்டோா் பங்கேற்றனா். திருக்கடையூா் ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் ஊராட்சி செயலாளா் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.