சிறைத் தண்டனை (கோப்புப் படம்)
நாகப்பட்டினம்

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

தினமணி செய்திச் சேவை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காரைக்கால் போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருநள்ளாறு நெய்வாச்சேரி பகுதியை சோ்ந்தவா் நந்தா (எ) நந்தகுமாா்(23). இவா், அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதான புகாரில் திருநள்ளாறு காவல் நிலையத்தில் 2025 ஏப்.3-ஆம் தேதி போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

நந்தகுமாருடன் நெடுங்காடு பகுதியைச் சோ்ந்த செளந்தர்ராஜ் (22) என்பவரும் கைது செய்தானாா். இந்த வழக்கு, காரைக்கால் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கின் இறுதி விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட நந்தகுமாருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், செளந்தர்ராஜை விடுவித்து நீதிமன்ற சிறப்பு நீதிபதி கே. மோகன் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் வீரபிள்ளை ஆஜரானாா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT