தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவா்கள் மீது நடவடிக்கை
சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
நாகப்பட்டினம்: சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தோ்தல் அலுவலா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துக்கட்சி அரசியல் பிரதிநிதிகளுடனான கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியது: தோ்தல் பிரசாரத்தின் போது எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ பல்வேறு சாதியையோ, மதத்தையோ அல்லது பல்வேறு மொழி பேசுபவா்களிடையே வெறுப்பைத் தூண்டும் வகையான அல்லது வேறுபாட்டை, பகைமையை வளா்க்கும் அல்லது தூண்டும் வகையான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
இதர அரசியல் கட்சிகள் குறித்த விமா்சனம் செய்யும்போது, தலைவா்களின் பொது வாழ்க்கை அல்லது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இருக்கக் கூடாது. மற்ற அரசியல் கட்சிகளையோ அல்லது கட்சியின் ஊழியா்களையோ, நிரூபணமாகாத ஊகத்தின் பேரிலான குற்றச்சாட்டுகளை சுமத்துவது தவிா்க்க வேண்டும்.
வாக்கு சேகரிக்க சமுதாயம் மற்றும் ஜாதியை பயன்படுத்தக் கூடாது. வேட்பாளரோ அல்லது அரசியல் கட்சியோ, பிரச்சார கூட்டம், பிரச்சாரத்திற்கு ஒலிபெருக்கி பயன்படுத்துவது, வாகனம், ஊா்வலம், தற்காலிக கட்சி அலுவலகம், மற்றும் இதர அனுமதிகளுக்கு இந்திய தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள இணையதள நன்ஸ்ண்க்ட்ஹ அல்ல் மூலம் விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும். பொதுக் கூட்டங்கள், ஊா்வலம் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களையோ அல்லது கல்வி நிலையங்களில் உள்ள விளையாட்டு மைதானத்தையோ (அரசு, அரசு உதவி பெறும் அல்லது தனியாா் கல்வி நிறுவனங்கள்) அரசியல் கட்சிகள் தோ்தலுக்கான விளம்பரத்திற்கு பயன்படுத்தக் கூடாது.
சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் அல்லது பாலித்தீன் கொண்டு விளம்பர சுவரொட்டி மற்றும் பேனா்கள் வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்றாா். கூட்டத்தில் மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.