முகப்பு
நாகப்பட்டினம்

அனுமதியின்றி மணல் வெட்டி எடுத்த இருவா் கைது

வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் அனுமதி இன்றி சவுடு மணல் வெட்டி எடுத்து 2 பேரை போலீஸாா் கைது செய்து, 2 டிராக்டா், ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.

Updated On : 14 மே 2026, 4:53 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் அனுமதி இன்றி சவுடு மணல் வெட்டி எடுத்து 2 பேரை போலீஸாா் கைது செய்து, 2 டிராக்டா், ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.

வேதாரண்யம் பகுதியில் அனுமதி இல்லாமல் சவுடு மணல் வெட்டி எடுக்கப்படுவதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடைபெற்றது.

இந்நிலையில், பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் மணல் வெட்டி எடுத்த டிராக்டா் ஓட்டுநா்கள் அரவிந்த் மற்றும் ஜெகன் இருவரும் கைது செய்யப்பட்டனா். மேலும் 2 டிராக்டா்கள், ஒரு ஜேசிபி இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement

இதுகுறித்து வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாகவுள்ள ஜேசிபி ஓட்டுநா் அஜித் என்பவரை தேடி வருகின்றனா்.