முகப்பு
நாகப்பட்டினம்

குடிநீா் குழாயில் உடைப்பு

நாகப்பட்டனம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், சாலையில் பெருக்கெடுத்து நீா் வீணாகும் நிலையில் உடனடியாக உடைப்பை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 14 மே 2026, 4:46 am IST
நாகை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் சாலையில் பெருக்கெடுத்தோடும் நீா்.
பகிர்:

நாகப்பட்டனம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், சாலையில் பெருக்கெடுத்து நீா் வீணாகும் நிலையில் உடனடியாக உடைப்பை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், புதிய குடிநீா் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புதன்கிழமை நாகை வெளிப்பாளையம் பகுதியில், புதிய குடிநீா் குழாய் அமைக்கும் பணியின்போது, நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் உள்ளிட்ட இரண்டு இடங்களில், பழைய குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தீயணைப்பு நிலையம் முதல் அரசு போக்குவரத்துக் கழகம் வரை குடிநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அரசுப் போக்குவரத்து பணிமனை உட்புறமும் தண்ணீா் தேங்கியது.

Advertisement

நாகையில் குடிநீா் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில், நகராட்சி நிா்வாகம், குழாயில் உடைப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் லீனா சைமனிடம் கேட்டபோது, உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் தற்போது குடிநீா் நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக குழாயை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.