ஆற்றில் கார் கவிழ்ந்து ஓட்டுநர் சாவு, 5 பேர் காயம்
பெங்களூரிலிருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் வழியில் திருவாரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர்.
பெங்களூரிலிருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் வழியில் திருவாரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர்.
பெங்களூர் என்.எஸ். பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோசப் (33). இவரது தாயார் ஜெபமாலைமேரி (58). மனைவி குழந்தைதெரசா (29), குழந்தைகள் பிரான்சினா (5), ஜோனா (7 மாதம்). குழந்தைகளுக்கு மொட்டை போடுவதற்காக இவர்கள் அனைவரும் பெங்களூரிலிருந்து ஒரு காரில் வேளாங்கண்ணிக்கு வந்து கொண்டிருந்தனர்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே மடப்புரம் கிளரியம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் வெட்டாற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Advertisement
Advertisement
இதில் கார் ஓட்டுநர் பெங்களூரைச் சேர்ந்த தொப்ளான் மகன் சுப்பிரமணியன் (40) அதே இடத்தில் உயிரிழந்தார். ஜோசப், குழந்தைத்தெரசா உள்ளிட்ட 5 பேரும் பலத்தக் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கொரடாச்சேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.