திருவாரூர்

திருவாரூர் நகரில் 6 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி: ஆட்சியர் தகவல்

திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட 6 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கூறினார்.

DIN

திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட 6 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கூறினார்.
திருவாரூர் நகரில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணியை புதன்கிழமை ஆய்வு செய்து ஆட்சியர் கூறியது:
மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்யும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மக்களுக்குத் தேவையான  இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள்  அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட சபாபதி முதலியார் தெரு, மருதப்பட்டினம் சாலை, மேட்டுப்பாளையம், குறிஞ்சி நகர், வடக்கு கொத்தத்தெரு, திருமஞ்சனவீதி ஆகிய இடங்களில் தலா ரூ. 1.75 லட்சம் வீதம், 6 இடங்களில் ரூ. 10.50 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்மூலம் 1,800 பேர் பயன்பெறுவர்  என்றார் ஆட்சியர் இல. நிர்மல்ராஜ். ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தியாகராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் காந்திநாதன் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

SCROLL FOR NEXT