திருவாரூர்

மன்னார்குடி தெப்பக்குளத்தில் தவறி விழுந்தவர் சாவு

DIN

மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் திங்கள்கிழமை தவறி விழுந்த ஐஸ் வியாபாரி உயிரிழந்தார்.
அண்ணா நகரைச் சேர்ந்தவர் தே. ஜெபஆசீர்வாதம் (45). தள்ளுவண்டியில் ஐஸ் வியாபாரம் செய்து வந்த இவர், திங்கள்கிழமை இரவு வியாபாரம் முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில், ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் குளிக்க இறங்கினார்.
அப்போது நிலைதடுமாறி தண்ணீரில் விழுந்து மூழ்கி இறந்தார். தகவல் அறிந்த மன்னார்குடி காவல் நிலைய போலீஸார், ஜெபஆசீர்வாதத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைககு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT