திருவாரூர்

குட்டையை தூய்மைப்படுத்திய பொதுமக்கள்

DIN

மன்னார்குடி நகராட்சிக்கு சொந்தமான நல்லாங்குட்டையை தூய்மைப்படுத்தும் பணியில் 9-ஆவது வார்டு பொதுமக்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
மன்னார்குடி 9-ஆவது வார்டுக்குள்பட்ட கீழ இரண்டாம் தெருவில் உள்ளது நல்லாங்குட்டை. இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமாக விளங்கும் இக்குட்டை தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் வறண்டு காணப்படுகிறது.
இக்குட்டையில்  செடி-கொடிகள் படர்ந்தும், பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளால் சுகாதாரமற்று காணப்பட்டது.
இதையடுத்து, 9-ஆவது வார்டு நகர் மன்ற முன்னாள் உறுப்பினர் ஆ. ஆனந்தராஜ், சமூக ஆர்வலர் கோ.வி. மீனாட்சிசுந்தரம் ஆகியோர் தலைமையில் இப்பகுதி பொதுமக்கள், இளைஞர் மன்றத்தினர் இந்த குட்டையை தூய்மைப்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT