திருவாரூர்

சார்பு ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்ட வழக்குரைஞர் மீது வழக்கு

DIN

காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்டதாக வழக்குரைஞர் உள்ளிட்ட சிலர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆலிவலம் காவல் நிலையத்தில், இளவரசநல்லூர் சதீஷ் என்பவர்அளித்த புகார் குறித்து, சார்பு ஆய்வாளர் மகாலெட்சுமியிடம் வழக்குரைஞர் சி. சுரேஷ்குமார் உள்ளிட்டோர் நடவடிக்கை கோரி வலியுறுத்தியுள்ளனர். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, பிறகு தாக்கி கொண்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், சார்பு ஆய்வாளர் மகாலட்சுமி, வழக்குரைஞர் சி. சுரேஷ்குமார் ஆகிய இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பிறகு, சார்பு ஆய்வாளர் மகாலெட்சுமி திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து ஆலிவலம் போலீஸார் வழக்குரைஞர் சி.சுரேஷ்குமார் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், திருத்துறைப்பூண்டி நீதிமன்ற வளாகம் அருகில் சார்பு ஆய்வாளர் மகாலட்சுமி மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வழக்குரைஞர் சங்கத் தலைவர் ரஜினி தலைமையில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT