திருவாரூர்

மெட்ரிக் பள்ளியில் உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் போட்டி

DIN

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில், மன்னார்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் போட்டி அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் க. மணாழகன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சாந்தி போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பற்ற உணவுப் பொருள்கள் என்ற தலைப்பில், மாணவ- மாணவியருக்கு ஓவியம், நிழற்படம் சேகரித்தல், விநாடி- வினா போட்டிகள் நடைபெற்றன. சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆசிரியர் ஜனனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT