திருவாரூரில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை புதன்கிழமை செலுத்தினர்.
ரஜினி மக்கள் மன்றத்துக்கான திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் திருவாரூர் மாவட்ட துணைச் செயலராக நியமிக்கப்பட்ட ரஜினிசக்தி தலைமையில் புதிய நிர்வாகிகள் ஆட்டோவில் ஊர்வலமாகச் சென்று நெய்விளக்கு தோப்பில் உள்ள எம்ஜிஆர் சிலை, அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை, திருவாரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள திரு.வி.கல்யாணசுந்தரம் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
நிகழ்ச்சியில், நிர்வாகிகள் தேவா, ஆர்.கே. செல்வம், ரஜினி மோகன், இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.