விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
உலக தேனீக்கள் வளர்ப்பு தினத்தையொட்டி, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு' பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
உலக தேனீக்கள் வளர்ப்பு தினத்தையொட்டி, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு' பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ. பாஸ்கரன் கூறியது : அயல் மகரந்தச் சேர்க்கையில் தேனீக்களின் பங்களிப்பை தெரிவித்து தற்போது தேனீ வளர்ப்புக்கு நல்ல வாய்ப்பு உள்ளதையும், அதை விவசாயிகள் முறைப்படி பராமரித்தால் பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கும் என்றார்.
பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜா. ரமேஷ், உலக தேனீக்கள் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள், தேனீக்களின் சிறப்பியல்புகள், தேனீப் பெட்டி வைக்கும்போது கவனிக்கப்பட வேண்டிய தொழில்நுட்பங்கள், தேனீக்கள் தங்களுக்குள் மகரந்தம் இருக்கும் இருப்பிடத்தை தெரிவிக்கும் நடன முறைகள், தேனீக்களைப் பராமரிக்கும் முறைகள், தேனீக்களை கையாளும் விதம் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைத்தார்.
இந்த பயிற்சியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 40 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகள் அனைவருக்கும் தேனீ வளர்ப்பு' குறித்த கையேடு வழங்கப்பட்டது.