உள்ளிக்கோட்டையில் அக்டோபர் 23 மின்தடை
மன்னார்குடி அருகேயுள்ள உள்ளிக்கோட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக்.23) மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆ. மதியழகன்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உள்ளிக்கோட்டை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.23) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் உள்ளிக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, ஆலங்கோட்டை, பரவாக்கோட்டை, பைங்காநாடு, தளிக்கோட்டை, கீழத்திருப்பாலக்குடி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.