திருவாரூர்

ஜனநாயக உரிமை பாதுகாப்பு இயக்க பிரசாரக் கூட்டம்

DIN

மன்னார்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஜனநாய உரிமை பாதுகாப்பு இயக்க பிரசாரப் பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பந்தலடியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, கட்சியின் நகரச் செயலாளர் எஸ். ஆறுமுகம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பேசியவர்கள், அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை மறுக்கப்படுவதாகவும், மத்திய- மாநில அரசுகள் மக்கள் விரோதப் போக்குடன் நடந்துகொள்வதாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும் பேசினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. தமிழ்மணி, மாவட்டக் குழு உறுப்பினர் டி. சந்திரா, நகரக் குழு உறுப்பினர்கள் ஜி.ரெகுபதி, கே. அகோரம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர். தாமோதரன், தையல் கலைஞர்கள் சங்கத் தலைவர் டி.ஜெகதீசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நகரத் தலைவர் கே. பிச்சைக்கண்ணு, சிஐடியு நிர்வாகி ஏகாம்பரம் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT