திருவாரூர்

சமரச தீர்வு குறித்து துண்டுப் பிரசுரம் வழங்கும் பணி

DIN


திருத்துறைப்பூண்டியில் அண்மையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவர்களுக்கு சமரச தீர்வு குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. 
திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வழக்குத் தொடுத்தவர்களுக்கு வழக்கை சமரசமாக தீர்வு காணுவதன் அவசியம், அதனால் ஏற்படும் தேவையற்ற கால விரயம், பொருள் விரயம் மற்றும் மனஉளைச்சலில் இருந்து விடுபடுவது குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ்கண்ணன், குற்றவியல் நீதிபதி கவிதா, வழக்குரைஞர் சங்கத் தலைவர் பி. சதீஸ்குமார்,  செயலர் குமண வள்ளல், மூத்த வழக்குரைஞர்கள் கோ. தருமராஜன், டி. ஆனந்தன் உள்ளிட்டோர் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை திருத்துறைப்பூண்டி வட்ட சட்டப் பணிக் குழுத் தன்னார்வலர் கருணாநிதி செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT