நீடாமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன்- மனைவி காயமடைந்தனர்.
அய்யம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த தங்கபாபு மகன் பிரகாஷ் (33). விவசாயி. இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த இவரது சித்தப்பா மோகன்தாஸுக்கும் வேலித்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில், பிரகாஷும், அவரது மனைவி அபிநயாவும் காயமடைந்தனர். இதுதொடர்பாக இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் அளித்த புகாரின்பேரில், மோகன்தாஸ், விக்னேஷ், தினேஷ் மற்றும் பிரகாஷ், அபிநயா மீது நீடாமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் வீரபரஞ்சோதி வழக்குப் பதிந்தார்.