திருவாரூர்

புயல் பாதித்த மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கல்

முத்துப்பேட்டை பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. 

DIN

முத்துப்பேட்டை பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. 
முன்னாள் விமானப்படை வீரர்கள், நாசிக் தமிழ்ச் சங்கம், காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர்கள் சங்கம், என்ரூட் குழுமம் ஆகியவை சார்பில், முத்துப்பேட்டையை அடுத்த பேட்டை சிவன் கோயில் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் விமானப்படை வீரர்கள் சங்க தஞ்சை மண்டல தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராஜ்மோகன், மூர்த்தி, பாலசுப்பிரமணியன், சர்க்கரை முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மீனவர்களுக்கு மண்டல துணைத் தலைவர் ஜெயக்குமார் மீன்பிடி வலை மற்றும் உபகரணங்களை வழங்கினார்.
இதேபோல், ஜாம்பவானோடை கிராமத்திலும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மீனவர் சங்க நிர்வாகிகள் கருணாநிதி, நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸ் எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்தார் பிரக்ஞா சதவ்!

கட்டுக்கடங்காத கூட்டம்! ஈரோட்டில் தன் பலத்தை நிரூபித்தாரா செங்கோட்டையன்?

சத்தீஸ்கர்: சுக்மாவில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

புரட்சித் தலைவருக்குப் பிறகு புரட்சித் தளபதிதான் மக்களுக்காக வாழ்பவர்: செங்கோட்டையன்

சாதனையை முறியடித்த லயன்: நாற்காலியைத் தூக்கி வீசிய மெக்ராத்!

SCROLL FOR NEXT