திருவாரூர்

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

DIN


வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயை 4,275 பயனாளிகளுக்கு சங்கத் தலைவர் சா. குணசேகரன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
இதன்மூலம் வலங்கைமான் விருப்பாட்சிபுரம், தொழுவூர், செம்மங்குடி, பாடகச்சேரி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பயனடைந்தனர். நிகழ்ச்சியில், பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் ஜெயபால், சத்யா குருமூர்த்தி, வங்கி துணைத் தலைவர் பூபதி பாண்டியன், வங்கிச் செயலாளர் கலைவாணன், கள அலுவலர் ஐயப்பன், கூட்டுறவு சார் பதிவாளர் ரவி, இயக்குநர்கள் காமராஜ் சம்பத், சின்னப்பா, ராஜா, முன்னாள் கவுன்சிலர்கள் ராஜராஜசோழன், அருள்முருகன், சேகர், வீட்டுவசதி சங்கத் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT