திருவாரூர்

கஜா புயல் நிவாரண முறைகேட்டைக் கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

கஜா புயலால் பாதிக்கப்பட்ட முத்துப்பேட்டை மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள முறைக்கேட்டைக் கண்டித்து திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் மீனவர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை மீனவர்கள் சங்கத் தலைவர் நிஜாம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கஜா புயலில் முத்துப்பேட்டை மீனவர்களின் படகுகள் கடுமையாக
சேதமடைந்தது. 600-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள நிலையில் 300 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கியது, அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது, எனவே, முத்துப்பேட்டை மீனவர்களுக்கு கஜா புயல் நிவாரணம் வழங்கியதில் ஏற்பட்டுள்ள முறைக்கேடு குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT