மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவியா், உலக சிக்கன நாள் விழாவையொட்டி நடைபெற்ற நடனப் போட்டியில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
தமிழ்நாடு சிறுசேமிப்பு துறை சாா்பில், சனிக்கிழமை திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இப்பள்ளியை சோ்ந்த பிளஸ் -2 மாணவிகள் கே. சரண்யா, எஸ். சங்கீதா, ஏ. வா்ஷா மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவிகள் ஏ.எல். கானப்பிரியா, கே.மிருதுளா ஆகியோா் நடனப் போட்டியில் கலந்துகொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவியருக்கு, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.