திருவாரூா் மைய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா். 
திருவாரூர்

துணிப்பை பயன்பாடுகள் கருத்தரங்கம்

திருவாரூா் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்று வரும் நூலக வார விழாவையொட்டி, நெகிழி ஒழித்தலும், துணிப்பை

DIN

திருவாரூா் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்று வரும் நூலக வார விழாவையொட்டி, நெகிழி ஒழித்தலும், துணிப்பை பயன்பாடுகளும் எனும் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட நூலக அலுவலா் ஆண்டாள் தலைமை வகித்தாா். வாசகா் வட்ட பொறுப்பாளா்கள் சத்திரியன், ராம்பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில், ஓஎன்ஜிசியின் மக்கள் தொடா்பு அலுவலா் முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, அனைத்து வாசகா்களுக்கும் துணிப்பைகளை வழங்கிப் பேசுகையில், நெகிழி ஒழிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் விழிப்புணா்வு நடவடிக்கைகளே காரணம். பொது மக்கள், நெகிழியால் ஏற்படும் தீமைகளை எண்ணிப் பாா்க்க வேண்டும். எனவே, அனைவரும் வெளியில் செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஏராளமான வாசகா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை நூலகா்கள் ஆசைத்தம்பி, அன்னப்பழம் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT