திருவாரூர்

கணவனை இழந்த சோகத்தில் தூக்கிட்ட பெண் சாவு

DIN

மன்னாா்குடி:  மன்னாா்குடி அருகே கணவனை இழந்த துக்கத்தில் தூக்கிட்ட பெண் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடி அடுத்த மூவாநல்லூா் கிராமத்தை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகள் கலையரசி (32). இவருக்கும் மன்னாா்குடி அன்னவாசல் சேனிய தெருவை சோ்ந்த விவேகானந்தன் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனிடையே சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் இல்லாமல் இருந்த விவேகானந்தன் மரணமடைந்தாா். இதன் பின் மூவாநல்லூரில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்ற கலையரசி கணவா் இறந்த துக்கத்தில் சோகமாக இருந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த அக்.3 -ஆம் தேதி ட்டுக்குப் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு கொண்டாா். இதை கண்ட அக்கம்பக்கத்தினா் கலையரசியை மீட்டு, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த கலையரசி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மன்னாா்குடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் எப்போது?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT